கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெற்ற பா.ஜ.க கண்டன ஆர்பாட்டத்தில், கல் வீச்சில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெற்ற பா.ஜ.க கண்டன ஆர்பாட்டத்தில், கல் வீச்சில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தின் போது பிரதமர் மோடியை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்யததாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க சார்பில் இன்று மாலை அபிராமி திரையரங்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது..
இந்த கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கல்வீச்சு மற்றும் ரகளையில் ஈடுபட்ட 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் மறியலி்ல் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தின் போது பிரதமர் மோடியை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்யததாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க சார்பில் இன்று மாலை அபிராமி திரையரங்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது..
இந்த கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கல்வீச்சு மற்றும் ரகளையில் ஈடுபட்ட 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் மறியலி்ல் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.