திருப்பூர் அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த 700க்கும் மேற்பட்ட காளைகள்..! 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700க்கும் மேற்பட்ட காளைகளும், 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700க்கும் மேற்பட்ட காளைகளும், 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம், அலகுமலையில், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சார்பில், 4-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது.



இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.



இந்த போட்டியில் 749 காளைகள், 555 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கு கால்நடைத்துறை சார்பில் மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். கொரோனா பரிசோதனை சான்றுடன் வந்த மாடுபிடி வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் 12 மாடுகள் பிடித்த நத்தம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் முதல் பரிசாக பைக் பரிசாக பெற்றார். இரண்டாம் பரிசாக மொபட் வத்தலக்குண்டுவைச் சேர்ந்த சவுடு, மூன்றாம் பரிசு ஒரு பவுன் தங்கசெயின் சிவகங்கை ஆதீஸ்வரனுக்கும் வழங்கப்பட்டது.

முதல் மாடு பரிசு தாராபுரம் விவேக் மோட்டார் பைக்கும், இரண்டாம் மாடு பரிசு லால்குடி பெலிக்ஸ் மொபட்டும், மூன்றாம் மாடு பரிசு ஜல்லிக்கட்டு ராஜசேகர் ஒரு பவுன் தங்க செயினும் வழங்கப்பட்டது.



மேலும், பங்கேற்ற அனைவருக்கும் அண்டாக்கள், வேட்டி, துண்டு, டி-சர்ட்டுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...