நீலகிரி: பல்வேறு போர்களில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு வெலிங்டனில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயத்தில் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நீலகிரி: பல்வேறு போர்களில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு வெலிங்டனில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயத்தில் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் நினைவு தின பிரார்த்தனை கூட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு பிரார்த்தனை கூட்டம் தேசிய தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டம் ராணுவ வீரர்கள் தங்களது வாழ்க்கையை நாட்டிற்கு அர்ப்பணித்ததை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் வெலிங்டன் ராணுவ மைய கமாடண்ட் ராஜேஷ்வர் சிங் கலந்துகொண்டு பாரம்பரிய முறைப்படி போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 135 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயத்தில் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு வீரமரணமடைந்த தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தி பிரார்த்தனையை மேற்கொண்டனர்.
போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் நினைவு தின பிரார்த்தனை கூட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு பிரார்த்தனை கூட்டம் தேசிய தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டம் ராணுவ வீரர்கள் தங்களது வாழ்க்கையை நாட்டிற்கு அர்ப்பணித்ததை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் வெலிங்டன் ராணுவ மைய கமாடண்ட் ராஜேஷ்வர் சிங் கலந்துகொண்டு பாரம்பரிய முறைப்படி போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 135 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயத்தில் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு வீரமரணமடைந்த தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தி பிரார்த்தனையை மேற்கொண்டனர்.