ராமர் கோவில் கட்டுவதற்காக நிதி திரட்ட கோவை வந்த வேலூர் இப்ராஹிம் கைது!

கோவை: ராமர் கோவில் கட்டுவதற்கு, நிதி திரட்டுவதற்காக கோவை வந்த பாஜகவை சேர்ந்த வேலூர் இப்ராஹிமை போலீசார் கைது செய்தனர்.


கோவை: ராமர் கோவில் கட்டுவதற்கு, நிதி திரட்டுவதற்காக கோவை வந்த பாஜகவை சேர்ந்த வேலூர் இப்ராஹிமை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் இப்ராஹிம் பா.ஜ.க.,வில் இணைந்து மத நல்லிணக்க பரப்புரைகள் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கோவையில் இன்று நிதி திரட்டி வந்தார். அப்போது, அவரை செட்டிபாளையம் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அவரை கைது செய்து மத்திய சிறைக்கு அழைத்துச்சென்றனர்.

இதுகுறித்து வேலூர் இப்ராஹிம் கூறுகையில், "மத நல்லிணக்கத்திற்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது சில பிரிவினைவாத சக்திகளால் எனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலீசார் என்னை கைது செய்கின்றனர். அவர்களை ஒடுக்குவதற்கு பதிலாக என்னை கைது செய்கின்றனர்.

கைதாகி சென்றாலும், மீண்டும் வந்து ராமர் கோவில் அமைக்க நிதி திரட்டுவேன்," என்று தெரிவித்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...