கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வெள்ளலூரில் ரூ 168.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்ததுடன் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வெள்ளலூரில் ரூ 168.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்ததுடன் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வெள்ளலூரில் ரூ.168.4 கோடி மதிப்பீட்டில் 61.62 ஏக்கர் பரப்பளவில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுவரும் பணிகள் குறித்தும், வெள்ளலூர் உரக்கிடங்கில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இன்று ஆய்வு செய்தார்.

பேருந்து நிலைய கட்டுமான பணிகளின் பல்வேறு நிலைகள் குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் கழிப்பிடம், குடிநீர் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய கட்டுமானப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து வெள்ளலூர் உரக்கிடங்கில் மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தையும், காய்கறி கழிவுகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் மையங்களையும் ஆணையாளர் பார்வையிட்டார்.

வெள்ளலூர் உரக்கிடங்கில் குப்பை எடை மேடையில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை வாகனங்கள் மூலம் கொண்டுவரும்போது அவற்றின் எடையைக் கண்டறிய கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாநகரப் பொறியாளா் ஆ.லட்சுமணன், உதவிப் பொறியாளர் ரவிக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வெள்ளலூரில் ரூ.168.4 கோடி மதிப்பீட்டில் 61.62 ஏக்கர் பரப்பளவில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுவரும் பணிகள் குறித்தும், வெள்ளலூர் உரக்கிடங்கில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இன்று ஆய்வு செய்தார்.
பேருந்து நிலைய கட்டுமான பணிகளின் பல்வேறு நிலைகள் குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் கழிப்பிடம், குடிநீர் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய கட்டுமானப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து வெள்ளலூர் உரக்கிடங்கில் மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தையும், காய்கறி கழிவுகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் மையங்களையும் ஆணையாளர் பார்வையிட்டார்.
வெள்ளலூர் உரக்கிடங்கில் குப்பை எடை மேடையில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை வாகனங்கள் மூலம் கொண்டுவரும்போது அவற்றின் எடையைக் கண்டறிய கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாநகரப் பொறியாளா் ஆ.லட்சுமணன், உதவிப் பொறியாளர் ரவிக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.