தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை கோவை வருகை. போலீசார் பலத்த பாதுகாப்பு.

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை கோவை வருகை. போலீசார் பலத்த பாதுகாப்பு.


கோவை: கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் நாளை கோவை வருகிறார். அவர், வருகையையொட்டி சிறப்பு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை கோவை வருகிறார்.

இவர், நாளை கோவையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க காலை, 11:00 மணிக்கு ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். காலை 11:15 மணிக்கு ரேஸ்கோர்ஸில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு செல்லும் அவர் மதியம், 12:00 மணிக்கு மருதமலையில் சுவாமி தரிசரனம் செய்கிறார். 

அதன்பின் மதியம், 12:40 மணிக்கு பேரூர் கோவிலுக்கு செல்கிறார். அங்கிருந்து புறப்பட்டு மதியம், 1:30 மணிக்கு மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். மதிய உணவுக்கு பின் மாலை, 5:45 மணிக்கு புத்தக வெளியீட்டு விழா ஒன்றில், பங்கேற்கிறார். அதன் பின் இரவு, 8:50 மணிக்கு விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டு செல்கிறார், என்று தெரிவித்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...