சி.ஆர்.ஐ பம்ப் நிறுவனத்துக்கு 6-வது முறையாக தேசிய மின்சார சேமிப்பு விருது!

கோவை: மின்சாரம் சேமிக்கும் பம்புகளைத் தயாரிப்பதில் முன்னோடியான சி.ஆர்.ஐ., 2020-ம் வருடத்துக்கான தேசிய மின்சார சேமிப்பு விருதை இந்திய அரசிடமிருந்து 6-வது முறையாக பெற்றுள்ளது.


கோவை: மின்சாரம் சேமிக்கும் பம்புகளைத் தயாரிப்பதில் முன்னோடியான சி.ஆர்.ஐ., 2020-ம் வருடத்துக்கான தேசிய மின்சார சேமிப்பு விருதை இந்திய அரசிடமிருந்து 6-வது முறையாக பெற்றுள்ளது.

சி.ஆர்.ஐ.பம்ப் நிறுவனம் அதைப் பயன்படுத்துபவர்கள்மூலம் இதுவரை 17,000 மில்லியன் யூனிட்களுக்கும் அதிகமாக மின்சாரத்தை சேமித்துள்ளது. மின்சாரம் சேமிப்பது மட்டுமன்றி கார்பன் படிவதையும் சுமார் 14 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு குறைத்துள்ளது. மின்சக்தியைச் சேமிக்கும் பம்புகள் தயாரிப்பதையும் முக்கிய குறிக்கோளாகக் கொண்ட சி.ஆர்.ஐ. பொறுப்புடன் செயல்படுவதுடன் அதேயளவு புதுமையோடும் செயல்படக்கூடியது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

நட்சத்திரக் குறியீடு பெற்ற பம்புகளைத் தயாரிப்பதற்கு பெயர்பெற்ற சி.ஆர்.ஐ. இதுவரை நாடுமுழுவதும் 1.65 மில்லியனுக்கும் அதிகமான பம்புகளை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. இதனால் விவசாயம், தயாரிப்பு தொழிற்சாலைகள் என பல பிரிவினரும் அதிகளவில் மின் சேமிப்பு செய்ய உதவியிருக்கிறது.

இந்த விருதை மத்திய மின்சக்தி துறை மந்திரி ஆர்.கே.சிங் வழங்க, சி.ஆர்.ஐ குழுமத்தின் இணை நிர்வாக இயக்குனர் ஜி. செல்வராஜ் பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-

மின்சாரம் சேமிக்கும் அதிக திறன் வாய்ந்த பம்புகளைத் தயாரித்ததற்காக இந்த என்.இ.சி. தேசிய விருதை சி.ஆர்.ஐ ஆறாவது முறையாகப் பெற்றிருக்கிறது. இதன்மூலம் எங்கள் வாடிக்கையாளர்களும் இந்த நாடும் பெருமளவு ஆற்றலையும் செலவினங்களையும் மிச்சப்படுத்த உதவி செய்துள்ளது.

இந்த விருதை இந்த வருடம் ஆறாவது முறையாக, அதிலும் நான்கு முறைகள் தொடர்ந்து பெற்றிருக்கிறோம் என்பதை மிகவும் பெருமிதத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். மின்சாரம் சேமிப்பதில் எங்களது விடாமுயற்சியை அறிந்து அதைப் பாராட்டியதற்காக இந்திய அரசாங்கத்துக்கு நன்றி.

இன்னும் அதிகம் உத்வேகத்துடன் வேலை செய்து எங்கள் திறமைகளை மெருகேற்ற இது எங்களை ஊக்குவிக்கிறது. எங்கள்மீது நம்பிக்கை வைத்து எங்களின் ஒவ்வொரு முயற்சியிலும் ஆதரிக்கும் எங்களது வாடிக்கையாளர்கள், டீலர்கள் மற்றும் பங்குதாரர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களிடம் உள்ள மிகச் சிறந்ததை வெளியே கொண்டுவர உதவிய எங்களது ரிசர்ச் அண்ட்டெவலப்மென்ட் பிரிவு, பொறியியலாளர்கள், நிர்வாகம் மற்றும் ஒவ்வொரு ஊழியருக்கும் நாங்கள் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...