கோவை: கோவையில் தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி கட்டாமல் ஏமாற்றி வந்த நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி கட்டாமல் ஏமாற்றி வந்த நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் இதே பகுதியில் ‘சன்ரைஸ் என்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் இரும்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு மோசடி நடப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
அதன்பேரில் ஜி.எஸ்.டி. இணை கமிஷனர் விஜயகிருஷ்ணவேலன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அந்த நிறுவனத்தார் இரும்புப் பொருட்களை விற்பனை செய்ததாக போலி பில் தயாரித்து அதன் மூலம் ரூ.2 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து நிறுவன உரிமையாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். இத்தகவல் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் இதே பகுதியில் ‘சன்ரைஸ் என்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் இரும்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு மோசடி நடப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
அதன்பேரில் ஜி.எஸ்.டி. இணை கமிஷனர் விஜயகிருஷ்ணவேலன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அந்த நிறுவனத்தார் இரும்புப் பொருட்களை விற்பனை செய்ததாக போலி பில் தயாரித்து அதன் மூலம் ரூ.2 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து நிறுவன உரிமையாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். இத்தகவல் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.