கோவை: வால்பாறையில் கோவிலை இடித்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் கோவிலை இடித்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள பகுதியில் சின்கோனா எஸ்டேட் உள்ளது. இங்குள்ள இரண்டாவது பிரிவு தேயிலை தோட்டத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது.

இந்நிலையில், இப்பகுதிக்கு இன்று அதிகாலை வந்த 7 காட்டு யானைகள் கோயிலின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தது.

மேலும், கோயில் உள்ளே இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்து சூறையாடியது. இதில் கோயில் முற்றிலும் சேதமடைந்தது.
இதையடுத்து, காட்டு யானைகள் வந்ததை அறிந்த தொழிலாளர்கள் வனத்துறை உதவியுடன் காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டி அடித்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் பீதியில் உள்ளனர். இதனால் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள பகுதியில் சின்கோனா எஸ்டேட் உள்ளது. இங்குள்ள இரண்டாவது பிரிவு தேயிலை தோட்டத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது.
இந்நிலையில், இப்பகுதிக்கு இன்று அதிகாலை வந்த 7 காட்டு யானைகள் கோயிலின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தது.
மேலும், கோயில் உள்ளே இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்து சூறையாடியது. இதில் கோயில் முற்றிலும் சேதமடைந்தது.
இதையடுத்து, காட்டு யானைகள் வந்ததை அறிந்த தொழிலாளர்கள் வனத்துறை உதவியுடன் காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டி அடித்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் பீதியில் உள்ளனர். இதனால் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.