அமைச்சர் எஸ் பி வேலுமணி, தொண்டாமுத்தூருக்கு மட்டுமே வளர்ச்சி பணிகளை செய்து வருகிறார்; கோவையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் குறிச்சி பிரபாகரன் தலைமையில் 400 க்கும் மேற்பட்ட திமுகவினர், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் குறிச்சி பிரபாகரன் தலைமையில் 400 க்கும் மேற்பட்ட திமுகவினர், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகையின் போது, மக்கள் பணிகளை செய்யாத உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டிப்பதாக திமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, குறிச்சி பிரபாகரன் உள்ளிட்ட திமுகவினர் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். 

ஆர்ப்பாட்டம் குறித்து குறிச்சி பிரபாகரன் கூறுகையில்: 

உள்ளாட்சித் துறையின் அமைச்சராக இருக்கும் எஸ் பி வேலுமணி, தொண்டாமுத்தூரில் மட்டுமே பணிகளை செய்து வருகிறார். அவருடைய தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு அருகே உள்ள கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுந்தராபுரம் கிணத்துக்கடவு - மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யவில்லை. 

சாலைகள் குண்டும் குழியுமாகவும், சீரான குடிநீர் இல்லாமல், பொதுமக்கள் மிகுந்த கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இப்பகுதிகளில், அமைச்சர் எவ்வித பணிகளையும் செய்யவில்லை என்றும், அதே சமயத்தில் தற்போது உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத போதிலும் அதிமுகவினர் அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு, தற்போதும் கவுன்சிலர்களை போல் உலா வருகிறார்கள், என்று குற்றம் சாட்டினார். 

பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளிடத்தில் பல முறை மனு அளித்தும், எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இன்னும் நான்கு மாத காலத்தில் திமுக ஆட்சி மலரும் திமுக தலைவர் தளபதி முதல்வராக வருவார், அதிமுக ஆட்சி தூக்கி எறியப்படும், இவ்வாறு அவர் கூறினார். 

முற்றுக்கையின் போது, மாவட்ட பிரதிநிதி நிசார் அகமது, வட்டச்செயலாளர்கள் கண்ணாமணி, கிருஷ்ணமூர்த்தி, ரமணி, முரளிதரன், காஜாகான், கோவிந்தராஜ், பகுதி துணை செயலாளர் லட்சுமி, மஞ்சுளா, மாவட்ட துணை அமைப்பாளர் வானவில் கனகராஜ், அனீபா, பிரேம்குமார் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...