கோவை: கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்று சிறை வாசம் அனுபவித்து வந்த கைது உடல்நிலை குறைவால் இன்று உயிரிழந்தார்.
கோவை: கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்று சிறை வாசம் அனுபவித்து வந்த கைது உடல்நிலை குறைவால் இன்று உயிரிழந்தார்.
இதுகுறித்து சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், கோவை மத்திய சிறையில், முருகசாமி என்பவர் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உடல்நிலை சரியில்லாமல் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்த சிறைக் காவலர்கள் அவரை சிறைத்துறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நள்ளிரவில் இருந்து சிகிச்சை பெற்று வந்த முருகசாமி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.