பொள்ளாச்சி நகர ரஜினி மன்ற நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர ரஜினி மன்ற நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர ரஜினி மன்ற நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

பொள்ளாச்சியில் உள்ள ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்து நிர்வாகிகள் விலகி தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.



கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ்தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர தி.மு.க. பொறுப்பாளர் வரதராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொள்ளாச்சி நகர தி.மு.க. துணைச் செயலாளர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர ரஜினி மன்ற துணைச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தி.மு.க.வில் இணைந்த புதிய நிர்வாகிகள் அனைவருக்கும், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட மீனவரணி அமைப்பாளர் மணிகண்டன், தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் கன்னிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...