திருப்பூர்: வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து சி.சி.டி.வி. காட்சியைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து சி.சி.டி.வி. காட்சியைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஜய். இவர்வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின்முன் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார் . திரும்பி வந்து பார்த்தபோது வாகனத்தைக் காணவில்லை.
இதையடுத்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பார்த்தபோது, அஜய் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றபிறகு அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் சிறிதுநேரம் அங்குமிங்கும் நோட்டமிடுவது பதிவாகியிருந்தது.
பின்னர் அந்த மர்ம நபர் திடீரென தனது கையில் வைத்திருந்த சாவியைக் கொண்டு இரு சக்கர வாகனத்தின் லாக்கை திறந்தார்.
லாக்கைத் திறந்தவுடன் மீண்டும் சாலையில் ஆள் நடமாட்டத்தைப் பார்த்துவிட்டு மெதுவாக இருசக்கர வாகனத்தை சிறிது தூரம் தள்ளிச் செல்வது கேமராவில் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் அஜய் திருப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.