கோவை: கோவையில் 72 வயது தாத்தா தனது பேத்தியை வீட்டில் வைத்து பராமரித்து வந்தார். இந்நிலையில் அவர் பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் தாத்தாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் 72 வயது தாத்தா தனது பேத்தியை வீட்டில் வைத்து பராமரித்து வந்தார். இந்நிலையில் அவர் பேத்தியை பாலியல் பலாத்காரம்செய்ததாக புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் தாத்தாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-ஈரோடு, விஜயமங்கலம், ஊத்துக்குளி ரோடு குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் பிரபு நாகராஜ். இவரது மனைவி லோகநாயகி (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.10 வயது மற்றும் 8 வயது குழந்தைகள்.
இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால் 2 பேத்திகளையும் கோவை ஒண்டிப்புதூர் கிருஷ்ணசாமி நாயுடு வீதியில் வசிக்கும் பிரபு நாகராஜின் தந்தை சுப்பிரமணியன் (வயது 72) என்பவரிடம் ஒப்படைத்தனர். அவர்களை பாதுகாத்து வந்த சுப்பிரமணியன்10 வயது மதிக்கத்தக்க பேத்தியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்தச் சிறுமி தாயார் லோகநாயகியிடம் கூறினார். அதைத் தொடர்ந்து லோகநாயகி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (கிழக்கு) புகார் செய்தார். இதையடுத்து தாத்தா சுப்பிரமணியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக தன்னுடைய சொந்த பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த தாத்தா கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-ஈரோடு, விஜயமங்கலம், ஊத்துக்குளி ரோடு குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் பிரபு நாகராஜ். இவரது மனைவி லோகநாயகி (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.10 வயது மற்றும் 8 வயது குழந்தைகள்.
இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால் 2 பேத்திகளையும் கோவை ஒண்டிப்புதூர் கிருஷ்ணசாமி நாயுடு வீதியில் வசிக்கும் பிரபு நாகராஜின் தந்தை சுப்பிரமணியன் (வயது 72) என்பவரிடம் ஒப்படைத்தனர். அவர்களை பாதுகாத்து வந்த சுப்பிரமணியன்10 வயது மதிக்கத்தக்க பேத்தியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்தச் சிறுமி தாயார் லோகநாயகியிடம் கூறினார். அதைத் தொடர்ந்து லோகநாயகி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (கிழக்கு) புகார் செய்தார். இதையடுத்து தாத்தா சுப்பிரமணியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக தன்னுடைய சொந்த பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த தாத்தா கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.