தைபூசத்தை முன்னிட்டு கோவையில் களைக்கட்டிய நிலாச்சோறு திருவிழா..!!

கோவை: தமிழகத்தின் பாரம்பரியமிக்க விழாக்களில் ஒன்றான நிலாச்சோறு திருவிழாவை, கோவை ஆவரம்பாளையம் துரைசாமி லே அவுட் பகுதியை சேர்ந்த பெண்கள் சிறப்பாக கொண்டாடினர்.



கோவை: தமிழகத்தின் பாரம்பரியமிக்க விழாக்களில் ஒன்றான நிலாச்சோறு திருவிழாவை, கோவை ஆவரம்பாளையம் துரைசாமி லே அவுட் பகுதியை சேர்ந்த பெண்கள் சிறப்பாக கொண்டாடினர்.



பழமை வாய்ந்த இந்த பாரம்பரிய பண்டிகையை கொண்டாடி வரும் ஆவரம்பாளையம், துரைசாமி லே அவுட் பகுதியை சேர்ந்த பெண்கள்,

"தமிழ் பண்பாட்டு கலாச்சார மையம் மற்றும் மனமகிழ் மன்றம்" எனும் அமைப்பை உருவாக்கி, இந்த பண்டிகையை, தைப்பூசம் நாளன்று ஆண்டுதோறும், கொண்டாடி வருகின்றனர்.

தைப்பூசத்துக்கு 7 நாட்கள் முன்பாகவே நிலவுக்கு மரியாதை செய்யும் வகையில் நிலாச்சோறு விழாவை கொண்டாடி வருவதாக, அவர்கள் தெரிவித்தனர்.



அதன்படி, இன்று நடைபெற்ற நிலாச்சோறு விழாவில், சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி கும்மியடித்து தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை, நிலா வெளிச்சத்தில் பங்கிட்டு உண்டு மகிழ்ந்தனர்.



இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த நித்யாராணி என்ற பெண் கூறுகையில், இது போன்ற விழாக்களை பலரும் மறந்து வருகின்றனர். இது போன்ற விழாக்களை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், ஆண்டுதோறும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறோம். வரும் காலங்களில் குழந்தைகளும் பாரம்பரியமான இந்த நிலாச் சோறு விழாவை கொண்டாட வேண்டும், என்றார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...