காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது எதிரொலி: கோவையில் இந்து முன்னணியினர் மறியல், 100 பேர் கைது

கோவை: திண்டுக்கல்லில் நீதிமன்ற உத்தரவின்படி கிரிவலம் சென்ற இந்து முன்னணியின் உடைய மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை இந்து முன்னணி சார்பாக இன்று மாலை கோவை காந்திபுரம் பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது. அதில் பங்கேற்ற, 100 க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: திண்டுக்கல்லில் நீதிமன்ற உத்தரவின்படி கிரிவலம் சென்ற இந்து முன்னணியின் உடைய மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை இந்து முன்னணி சார்பாக இன்று மாலை கோவை காந்திபுரம் பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது. அதில் பங்கேற்ற, 100 க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் கோவில் கிரிவலத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துதிருந்தது எனவும் இருப்பினும், ஊர்வலத்தை நடத்த முயன்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்ரா சுப்ரமணியம் கைது செய்யப்பட்டார், என்று இந்து முன்னணியர் தெரிவித்தனர்.



எனவே, அவர் கைதை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் காந்திபுரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற, 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது, பல்வேறு கோஷங்களை எழுப்பிய அவர்கள், காவல்ன்துறையினர் ஒரு தலைப்பட்சமாக நடப்பதாகவும் நீதிமன்ற உத்தரவு இருந்தும், மாநில தலைவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது எனவும் கண்டனங்களை தெரிவித்து, இது குறித்து போராட்டங்கள் தொடரும் என்று தெரிவித்தனர்.

போராட்டதிற்கு, அமைப்பின் மாவட்ட தலைவர் கே.தசரதன் தலைமை வகித்தார். மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் முன்னிலை வகித்தார். ஆ.கிருஷ்ணன், மாவட்ட பொது செயலாளர் M.ஜெய்சங்கர் மாநில நிர்வாககுழு உறுப்பினர் த.குணா மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...