கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் காவடியை ஏந்தியும், தலையில் பால் குடத்தை சுமந்தும் பறவைக் காவடியில் தொங்கியும் அரோகரா என்ற கோஷத்துடன் முக்கிய வீதிகளின் வழியே மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
பின்னர், முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகமும், சிறப்பு ஆராதனைகளும் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்துடன் வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீ சுப்பிரமணிய சாமி காட்சியளித்தார்.
இதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத விதமாக வால்பாறை காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் காவடியை ஏந்தியும், தலையில் பால் குடத்தை சுமந்தும் பறவைக் காவடியில் தொங்கியும் அரோகரா என்ற கோஷத்துடன் முக்கிய வீதிகளின் வழியே மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
பின்னர், முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகமும், சிறப்பு ஆராதனைகளும் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்துடன் வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீ சுப்பிரமணிய சாமி காட்சியளித்தார்.
இதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத விதமாக வால்பாறை காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.