தைப்பூச திருவிழா: வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலம்!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.



இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் காவடியை ஏந்தியும், தலையில் பால் குடத்தை சுமந்தும் பறவைக் காவடியில் தொங்கியும் அரோகரா என்ற கோஷத்துடன் முக்கிய வீதிகளின் வழியே மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

பின்னர், முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகமும், சிறப்பு ஆராதனைகளும் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்துடன் வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீ சுப்பிரமணிய சாமி காட்சியளித்தார்.

இதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத விதமாக வால்பாறை காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...