கோவையில் நடைபெற்ற மனித நேய வார விழாவில் மாவட்ட எஸ்.பி அருளரசு பங்கேற்பு - மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு!

கோவை: கோவையில் நடைபெற்ற மனித நேய வார விழாவில் பங்கேற்ற மாவட்ட எஸ்.பி அருளரசு மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார்.


கோவை: கோவையில் நடைபெற்ற மனித நேய வார விழாவில் பங்கேற்ற மாவட்ட எஸ்.பி அருளரசு மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக அரசின் உத்தரவுப்படி கோவை மாநகரம் மற்றும் கோவை மாவட்ட காவல் துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக மனித நேய வார விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, இந்த விழாவுக்கான ஏற்பாட்டினை அய்யாசாமி கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மனிதநேயம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டிகளில் கலந்து தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டினர்.

இந்த வார விழாவில் உதவி ஆணையர் செல்வம் வரவேற்றுப் பேசினார். அரசு வழக்கறிஞர் மாரிமுத்து, கண்காணிப்புக் குழு உறுப்பினர் செல்வகுமார் மற்றும் பலர் தங்களுடைய மனிதநேய கருத்துக்களை மாணவ மாணவிகளிடையே எடுத்துக் கூறினார்.

பின்னர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவுக்கு தலைமை தாங்கி மாணவ மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார்.



அப்போது, அவர் மனிதநேயம் குறித்து மாணவர்களுக்கு சிறப்பாக எடுத்துக் கூறினார். ஜாதி, மத, இன, மொழி இவைகளை கடந்து சமுதாயத்தோடு ஒன்றாக இணைந்து வாழும்போது தான் நம் வீட்டின் அருகாமையில் வசிக்கக்கூடிய ஒருவருக்கு ஒரு ஆபத்து என்கிற போது சாலையில் செல்லும் பொழுது விபத்தில் சிக்கி விட்டால் உடனடியாக அவரை மீட்டு காப்பாற்றும் போதும் அவர் நமது உறவுக்காரர் என்று பார்ப்பது கிடையாது. நம்மை அறியாமலேயே நம்முடைய மனது அந்த காரியத்தில் முழுமையாக செயல்படும். இதுவே மனிதநேயம் ஆகும்.

மனிதநேயம் என்பது நம்முடைய ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆழமான அன்பாக வேரூன்றியுள்ளது. மனிதநேயம் இருப்பதால் மட்டுமே இந்த பூமி இன்னும் நம்மை தாங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் மாணவ-மாணவியர்கள் அனைத்தையும் கடந்து மனித நேயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு கணமும் செயல்படவேண்டும் இவ்வாறு கூறினார்.



இறுதியாக மனிதநேய பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவப்படுத்தினார். காவல் ஆய்வாளர் கனகராஜ் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...