நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி இயங்கி வந்த தங்கும் விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து, மசினகுடியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் காலவரையின்றி மூடப்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி இயங்கி வந்த தங்கும் விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து, மசினகுடியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் காலவரையின்றி மூடப்பட்டது.
மசினகுடி பகுதியில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த தனியார் தங்கும் விடுதிக்குள் நுழைந்த காட்டு யானைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக 56 தங்கும் விடுதிகளுக்கு மசினகுடி ஊராட்சி மூலமாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் வீட்டிற்கான அனுமதி பெற்று சட்டவிரோதமாக தங்கும் விடுதிகளை வணிகரீதியாக நடத்தியவரும் தங்கும் விடுதிகளுக்கு உரிய அனுமதியை பெறும் வரை தாங்களாகவே மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டப்படிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக விடுதி உரிமையாளர்கள் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின் அனுமதி கிடைக்கும் வரை தாங்களாகவே விடுதிகளை மூடிவைப்பதென்று முடிவெடுத்து இன்று மூடும் பணியை துவங்கியுள்ளனர்.
மசினகுடி பகுதியில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த தனியார் தங்கும் விடுதிக்குள் நுழைந்த காட்டு யானைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக 56 தங்கும் விடுதிகளுக்கு மசினகுடி ஊராட்சி மூலமாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் வீட்டிற்கான அனுமதி பெற்று சட்டவிரோதமாக தங்கும் விடுதிகளை வணிகரீதியாக நடத்தியவரும் தங்கும் விடுதிகளுக்கு உரிய அனுமதியை பெறும் வரை தாங்களாகவே மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டப்படிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக விடுதி உரிமையாளர்கள் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின் அனுமதி கிடைக்கும் வரை தாங்களாகவே விடுதிகளை மூடிவைப்பதென்று முடிவெடுத்து இன்று மூடும் பணியை துவங்கியுள்ளனர்.