பொள்ளாச்சி: டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பொள்ளாச்சி விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொள்ளாச்சி: டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பொள்ளாச்சி விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அகில இந்திய விவசாய சங்கத்தின் அமைப்புக் கூட்டம் பொள்ளாச்சி - கோவை ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாம்பட்டி ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பொள்ளாச்சி வட்டாரத்தில் விவசாய சங்க கிளை அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், அகில இந்திய விவசாய சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அகில இந்திய விவசாய சங்கத்தின் அமைப்புக் கூட்டம் பொள்ளாச்சி - கோவை ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாம்பட்டி ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பொள்ளாச்சி வட்டாரத்தில் விவசாய சங்க கிளை அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், அகில இந்திய விவசாய சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.