வால்பாறை: குடிபோதையில் தகராறு செய்த அக்கா கணவரை தட்டிக்கேட்டவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
கோவை: குடிபோதையில் தகராறு செய்த அக்கா கணவரை தட்டிக்கேட்டவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
வால்பாறை காவல் நிலைய சரகத்தில் உள்ள காமராஜர் நகரில் குடியிருப்பவர் அனுசுயா. கூலித்தொழிலாளி. இவரது கணவர் பெயர் கனகரத்தினம் (வயது 45). கட்டட கூலி வேலை செய்து வருகிறார். அனுசுயாவின் தம்பி பழனி ராஜா (வயது 31) திருமணமாகாத இவர் அனுசுயாவின் வீட்டில் தங்கியிருந்து கூலிவேலை செய்து வந்தார்.
நேற்று இரவு 10 மணியளவில் பழனிராஜா வேலை முடிந்து தனது அக்கா வீட்டுக்கு வந்தார். அப்போது. தனது அக்காவின்கணவர் கனகரத்தினம் குடிபோதையில் அக்காவிடம் தகராறு செய்து கொண்டிருப்பதைப் பார்த்து, ஏன் மாமா குடித்துவிட்டு வந்து அக்காவிடம் தகராறு செய்கிறீர்கள், போய் படுத்து தூங்குங்கள். நாளைக்கு வேலைக்கு போகவேண்டுமல்லவா? என்று கூறியுள்ளார்.
அதற்கு கனகரத்தினம், `நான் அப்படித்தான் சத்தம் போடுவேன், நீ என்ன பண்ணுவ...' என்று சொல்லிவிட்டு, பாத்ரூமிற்கு சிறுநீர் கழிக்கச் சென்றார். திடீரென சமையலறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துவந்து,பழனிராஜாவின் இடது மார்பில் கத்தியா குத்தினார். இதைப் பார்த்த அனுசுயா சத்தம் போடவே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன், பழனி ராஜாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாகக் கூறினார். அவருடைய உடல் வால்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. கனகரத்தினத்தை, வால்பாறை போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வால்பாறை காவல் நிலைய சரகத்தில் உள்ள காமராஜர் நகரில் குடியிருப்பவர் அனுசுயா. கூலித்தொழிலாளி. இவரது கணவர் பெயர் கனகரத்தினம் (வயது 45). கட்டட கூலி வேலை செய்து வருகிறார். அனுசுயாவின் தம்பி பழனி ராஜா (வயது 31) திருமணமாகாத இவர் அனுசுயாவின் வீட்டில் தங்கியிருந்து கூலிவேலை செய்து வந்தார்.
நேற்று இரவு 10 மணியளவில் பழனிராஜா வேலை முடிந்து தனது அக்கா வீட்டுக்கு வந்தார். அப்போது. தனது அக்காவின்கணவர் கனகரத்தினம் குடிபோதையில் அக்காவிடம் தகராறு செய்து கொண்டிருப்பதைப் பார்த்து, ஏன் மாமா குடித்துவிட்டு வந்து அக்காவிடம் தகராறு செய்கிறீர்கள், போய் படுத்து தூங்குங்கள். நாளைக்கு வேலைக்கு போகவேண்டுமல்லவா? என்று கூறியுள்ளார்.
அதற்கு கனகரத்தினம், `நான் அப்படித்தான் சத்தம் போடுவேன், நீ என்ன பண்ணுவ...' என்று சொல்லிவிட்டு, பாத்ரூமிற்கு சிறுநீர் கழிக்கச் சென்றார். திடீரென சமையலறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துவந்து,பழனிராஜாவின் இடது மார்பில் கத்தியா குத்தினார். இதைப் பார்த்த அனுசுயா சத்தம் போடவே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன், பழனி ராஜாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாகக் கூறினார். அவருடைய உடல் வால்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. கனகரத்தினத்தை, வால்பாறை போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.