கோவையில், விரலில் காயம்பட்ட சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலி!

கோவை: கோவை தனியார் மருத்துவமனையில் விரல் காயத்துக்காக சிகிச்சை பெற்று வந்த மாணவி திடீரென பரிதாபமாக உயிரிழந்தார்.



கோவை: கோவை தனியார் மருத்துவமனையில் விரல் காயத்துக்காக சிகிச்சை பெற்று வந்த மாணவி திடீரென பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹேமவர்ணா (வயது 7). கதவிடுக்கில் இவரது கை சிக்கியதால் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இந்நிலையில் நேற்று சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதில் தங்களது மகளின் இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் கூறும்போது, சிறுமிக்கு தலையில் ரத்தக் கசிவு இருந்ததாகவும், அதனால்தான் அவர் இறந்ததாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் பிரேத பரிசோதனையின் முடிவில்தான் அதற்கான முழு காரணம் தெரியவரும் என்றார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...