தைப்பூச விழாவை முன்னிட்டு அரசு விடுமுறை, அரசு அலுவலகம், வங்கிகள் செயல்படவில்லை

கோவை: கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் கடவுளாகிய, முருகப் பெருமானை சிறப்பித்து, தமிழகத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில், மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழாவிற்கு இந்த ஆண்டு முதல் அரசு விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.


கோவை: கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் கடவுளாகிய, முருகப் பெருமானை சிறப்பித்து, தமிழகத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில், மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழாவிற்கு இந்த ஆண்டு முதல் அரசு விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

இன்று தைப்பூச விழா என்பதால் கோவையில் உள்ள அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், போன்றவைகள் செயல்படவில்லை. அங்கு ஒரு சில அலுவலர்கள் மட்டுமே வந்து அவர்களின் சொந்த விருப்பப்படி பணிபுரிந்து கொண்டிருந்தனர்.

அரசு ஊழியர்கள் வேலைக்கு வராததால், அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. ரேஷன் கடை மிகவும் அத்தியாவசியமான பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கடை என்பதால், அவை அரசு விடுமுறை நாட்களிலும் இயங்குவது வழக்கம். தைப்பூசத்தை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்துள்ளது. சில பொது விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இதனால் தைப்பூசத்திற்கு விடுமுறை அறிவிக்குமாறு ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தன. அதை ஏற்று அரசு, ரேஷன் கடைகளுக்கு தைப்பூசம் இன்று விடுமுறை அறிவித்துள்ளது.

இதற்கிடையில், இன்று பணியில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் வார விடுப்பில் உள்ள ஊழியர்கள் வேறொரு நாளில் மாற்று விடுப்பு எடுத்துக் கொள்ளவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. தைப்பூச விழாவை முன்னிட்டு கோவை மருதமலை முருகன் கோவிலில் இன்று காலையிலிருந்து சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடைபெற்று வருகின்றன.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...