மருதமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்: தைப்பூச தேரோட்டம் ரத்து!

கோவை: மருதமலை கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சுப்ரமணியசுவாமி - வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.



கோவை: மருதமலை கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சுப்ரமணியசுவாமி - வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.



கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவில் முருகப்பெருமானின் 7-வது படைவீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக தைப்பூச திருவிழா நடைபெற கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்நிலையில் கடந்த 21-ந் தேதி இரவு வாஸ்துபூஜையும், 22-ந் தேதி கொடியேற்றமும் நடைபெற்றது. தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. திருக்கல்யாண நிகழ்வின் தொடக்கமாக அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் 3 மணி முதல் 6 மணிக்குள் சுப்ரமணிய சுவாமி - வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.



இதைத்தொடர்ந்து சிறிய தேரில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கொரோனோ பரவல் காரணமாக தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு பாதயாத்திரை வந்த பக்தர்கள் மற்றும் பால்குடம், பால்காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

திருக்கல்யாண நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் காலை 7 மணிக்கு மேல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர் மேலும் மலைக்கோவிலுக்கு கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. வழக்கமாக வெகு விமரிசையாக நடைபெறும் திருக்கல்யாணம் இந்த ஆண்டு ஆரவாரமின்றி நடைபெற்றது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...