ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா இந்த ஆண்டு நடக்குமா? பக்தர்கள் குழப்பம்!

கோவை: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா குறித்த அறிவிப்பு வெளியிடப்படாததால் இந்த ஆண்டு விழா நடக்குமா? என பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


கோவை: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா குறித்த அறிவிப்பு வெளியிடப்படாததால் இந்தஆண்டு விழா நடக்குமா? என பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு உள்ளூர், வெளியூர் மட்டுமன்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்வது வழக்கம். விஷேச நாட்கள் மட்டுமல்லாமல் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்துசெல்வார்கள்.

ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம் விழா விமரிசையாக நடைபெறும். இந்த விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசையன்று கொடியேற்றத்துடன் குண்டம் விழா துவங்கும்.

குண்டம் விழா துவங்குவதற்கு முன்பு 15 நாட்களுக்கு முன்பே குண்டம் விழா குறித்த ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு குண்டம் விழா குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.

இந்த ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி தை அமாவாசை வரவுள்ளது. ஆனால், தற்போதுவரை குண்டம் விழா குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால், பக்தர்கள் குண்டம்விழா நடக்குமா, நடக்காதா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.

கொரோனாவின் பாதிப்பு இன்னும் குறையாததால் குண்டம் விழா நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி கோயில் நிர்வாகம் சார்பாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, குண்டம் விழா நடத்துவது குறித்த மாவட்ட நிர்வாகத்தினரே முடிவு செய்து அறிவிப்பார்கள் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...