கோவை: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா குறித்த அறிவிப்பு வெளியிடப்படாததால் இந்த ஆண்டு விழா நடக்குமா? என பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கோவை: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா குறித்த அறிவிப்பு வெளியிடப்படாததால் இந்தஆண்டு விழா நடக்குமா? என பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு உள்ளூர், வெளியூர் மட்டுமன்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்வது வழக்கம். விஷேச நாட்கள் மட்டுமல்லாமல் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்துசெல்வார்கள்.
ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம் விழா விமரிசையாக நடைபெறும். இந்த விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசையன்று கொடியேற்றத்துடன் குண்டம் விழா துவங்கும்.
குண்டம் விழா துவங்குவதற்கு முன்பு 15 நாட்களுக்கு முன்பே குண்டம் விழா குறித்த ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு குண்டம் விழா குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.
இந்த ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி தை அமாவாசை வரவுள்ளது. ஆனால், தற்போதுவரை குண்டம் விழா குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால், பக்தர்கள் குண்டம்விழா நடக்குமா, நடக்காதா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.
கொரோனாவின் பாதிப்பு இன்னும் குறையாததால் குண்டம் விழா நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி கோயில் நிர்வாகம் சார்பாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, குண்டம் விழா நடத்துவது குறித்த மாவட்ட நிர்வாகத்தினரே முடிவு செய்து அறிவிப்பார்கள் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு உள்ளூர், வெளியூர் மட்டுமன்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்வது வழக்கம். விஷேச நாட்கள் மட்டுமல்லாமல் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்துசெல்வார்கள்.
ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம் விழா விமரிசையாக நடைபெறும். இந்த விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசையன்று கொடியேற்றத்துடன் குண்டம் விழா துவங்கும்.
குண்டம் விழா துவங்குவதற்கு முன்பு 15 நாட்களுக்கு முன்பே குண்டம் விழா குறித்த ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு குண்டம் விழா குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.
இந்த ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி தை அமாவாசை வரவுள்ளது. ஆனால், தற்போதுவரை குண்டம் விழா குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால், பக்தர்கள் குண்டம்விழா நடக்குமா, நடக்காதா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.
கொரோனாவின் பாதிப்பு இன்னும் குறையாததால் குண்டம் விழா நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி கோயில் நிர்வாகம் சார்பாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, குண்டம் விழா நடத்துவது குறித்த மாவட்ட நிர்வாகத்தினரே முடிவு செய்து அறிவிப்பார்கள் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.