கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ குடிநீர் வழங்கும்‌ திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு, ஆணையாளர் உத்தரவு!

கோவை: கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ குடிநீர் வழங்கும்‌ திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு, ஆணையாளர் உத்தரவிட்டார்.


கோவை: கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ குடிநீர் வழங்கும்‌ திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு, ஆணையாளர் உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சியில்‌ பிரதான அலுவலகத்தில்‌ அனைத்து மண்டலங்களிலும்‌ குடிநீர் வழங்கும்‌ பணிகள்‌ குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅதிகாரி பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌தலைமையில்‌ நடைபெற்றது.

அப்போது கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ அலுவலர்களுக்கு சில பணிகளைச் செய்யுமாறு உத்தரவிட்டார்‌. கோவை மாநகராட்சியில்‌ குடிநீர் பணிகளுக்காக குழாய்‌ பதிக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருகின்றன. குழாய்‌ பதிப்பதற்கோ, கசிவுகளை அடைப்பதற்கோ சாலைகளை தோண்டுவதற்கு முன்‌ மாநகராட்சியின்‌ உரிய அலுவலர்களிடம்‌ தகவல்‌ தெரிவிக்க வேண்டும்.

இதையடுத்தேகுடிநீர்‌ பணிகளுக்காக சாலைகளில்‌ தோண்டப்பட்ட இடங்களில்‌ உடனடியாக சமன்‌ செய்திட வேண்டும். ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ குடிநீர் வழங்கும்‌ திட்டப்பணிகளையும்‌ விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.மதுராந்தகி, செயற்பொறியாளர்‌ பார்வதி, பொறியாளர்கள்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌, உதவி பொறியாளர்கள்‌, திட்ட மேலாண்மை ஆலோசகர்‌ குழுத்தலைவர்‌ கோபாலகிருஷ்ணன்‌ மற்றும்‌ தொடர்புடைய அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...