கோவை: "வேளான் விரோத சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி தலைநகர் டில்லியில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மோடி அரசை கண்டிக்கிறோம் என்று கோஷங்களை எழுப்பி கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: "வேளான் விரோத சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி தலைநகர் டில்லியில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மோடி அரசை கண்டிக்கிறோம் என்று கோஷங்களை எழுப்பி கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், உலகையே அதிரச் செய்துள்ள விவசாயிகள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்தகாலனி பவர்ஹவுஸ் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.
"மத்திய மோடி அரசு விவசாயிகளுக்கு விரோதமாக மூன்று வேளான் விரோத சட்டங்களை இயற்றியுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து பெரும்பான்மை என்கிற சர்வாதிகாரத்தனத்தோடு இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதனை கண்டித்து தலைநகர் டில்லியில் 60 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரிலும் தொடர்ந்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்", என்று தெரிவித்தனர்.
இதனிடையே, இப்போராட்டத்தின் ஒருபகுதியாக குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் சங்க கூட்டு இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதனையேற்று, லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டில்லியில் அணிவகுத்து வந்தனர். அமைதி வழியில் நடைபெற்ற பேரணியை சீர்குலைக்கும் நோக்கத்தோடு மத்திய அரசின் கீழ் இயங்கும் டில்லி காவல்துறை விவசாயிகள் மீது கொடூரமான தாக்குதலை தொடுத்தது. இதில் ஒரு விவசாயி பலியானதோடு, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயமடைந்தனர், என்றுண்குற்றம் சாட்டினர்.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுபபினர்கள் எஸ்.கருப்பையா, கே.மனோகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.அஜய்குமார், என்.பாலமூர்த்தி உள்ளிட்ட மாவட்ட செயற்குழு மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும், உலகையே அதிரச் செய்துள்ள விவசாயிகள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்தகாலனி பவர்ஹவுஸ் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.
"மத்திய மோடி அரசு விவசாயிகளுக்கு விரோதமாக மூன்று வேளான் விரோத சட்டங்களை இயற்றியுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து பெரும்பான்மை என்கிற சர்வாதிகாரத்தனத்தோடு இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதனை கண்டித்து தலைநகர் டில்லியில் 60 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரிலும் தொடர்ந்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்", என்று தெரிவித்தனர்.
இதனிடையே, இப்போராட்டத்தின் ஒருபகுதியாக குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் சங்க கூட்டு இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதனையேற்று, லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டில்லியில் அணிவகுத்து வந்தனர். அமைதி வழியில் நடைபெற்ற பேரணியை சீர்குலைக்கும் நோக்கத்தோடு மத்திய அரசின் கீழ் இயங்கும் டில்லி காவல்துறை விவசாயிகள் மீது கொடூரமான தாக்குதலை தொடுத்தது. இதில் ஒரு விவசாயி பலியானதோடு, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயமடைந்தனர், என்றுண்குற்றம் சாட்டினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுபபினர்கள் எஸ்.கருப்பையா, கே.மனோகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.அஜய்குமார், என்.பாலமூர்த்தி உள்ளிட்ட மாவட்ட செயற்குழு மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.