கோவை: கோவை மாவட்டத்தில் கூடுதலாக அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் கூடுதலாக அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா அச்சம் காரணமாக 1000 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்க தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதனால், கோவையில் கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இங்கு குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் தற்போது 3 ஆயிரத்து 48 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பெயர் பட்டியல் படி கூடுதலாக 1,574 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.
இந்த வாக்குச்சாவடி மையங்களில் மின்சார வசதி, கழிப்பறை வசதி, குடிநீர், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கொரோனா அச்சம் காரணமாக 1000 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்க தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதனால், கோவையில் கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இங்கு குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் தற்போது 3 ஆயிரத்து 48 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பெயர் பட்டியல் படி கூடுதலாக 1,574 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.
இந்த வாக்குச்சாவடி மையங்களில் மின்சார வசதி, கழிப்பறை வசதி, குடிநீர், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.