:கோவை: ஈஷா யோகா மையம் அருகே பஸ்சுக்காக காத்திருந்த தம்பதியை யானை தாக்கியது. லேசான காயங்களுடன் அந்த தம்பதி உயிர்தப்பினர்.
கோவை: ஈஷா யோகா மையம் அருகே பஸ்சுக்காக காத்திருந்த தம்பதியை யானை தாக்கியது. லேசான காயங்களுடன் அந்த தம்பதி உயிர்தப்பினர்.
நாமக்கல்லைச் சேர்ந்தவர் வெங்கடச்சலம் (வயது 62). அவரது மனைவி சரோஜா (வயது 55). இவர்கள் இருவரும் ஈஷா யோகா மையத்துக்கு சென்றுவிட்டு நேற்று இரவு 7.30 மணி அளவில் மலைவாசல் அருகே உள்ள பஸ் நிலையத்தில் வீடு திரும்புவதற்காக பஸ்சுக்காக காத்திருந்தனர்.
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக அங்கு வந்த காட்டுயானை அவர்களை பின்னாலிருந்து தாக்கி தரையில் தள்ளியது. இதில் காயமடைந்த அவர்களை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.