கோவை: கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி பழனிசாமியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, கோவை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை: கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி பழனிசாமியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, கோவை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு. க ஸ்டாலின் கூறியதாவது:- தலைநகர் டெல்லியில் விவசாய போராட்டத்தில் வன்முறைை
நடந்தால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவசாயிகள் உணர வேண்டும்.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசு உதாசீனம் செய்து வருகின்றது.
மத்திய அரசின் பின்னடைவான அணுகுமுறையின் விளைவு தான், குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த போராட்டக் காட்சிகள்.
வன்முறை தவிர்க்கப்பட வேண்டும், ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயற்சி செய்ய வேண்டும், என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக, கட்சியின் மூத்த உறுப்பினரும் 105 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டிக்கு பொன்னாடை அணிவித்து மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தார். அதற்கு பாட்டி மு. க. ஸ்டாலின் கைகளைப்பிடித்து நன்றி கூறி வாழ்த்தினார். விருது அறிவித்தவுடன் பாட்டியை ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததாக, நெகிழ்ச்சிபட தெரிவித்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு. க ஸ்டாலின் கூறியதாவது:- தலைநகர் டெல்லியில் விவசாய போராட்டத்தில் வன்முறைை
நடந்தால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவசாயிகள் உணர வேண்டும்.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசு உதாசீனம் செய்து வருகின்றது.
மத்திய அரசின் பின்னடைவான அணுகுமுறையின் விளைவு தான், குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த போராட்டக் காட்சிகள்.
வன்முறை தவிர்க்கப்பட வேண்டும், ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயற்சி செய்ய வேண்டும், என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக, கட்சியின் மூத்த உறுப்பினரும் 105 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டிக்கு பொன்னாடை அணிவித்து மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தார். அதற்கு பாட்டி மு. க. ஸ்டாலின் கைகளைப்பிடித்து நன்றி கூறி வாழ்த்தினார். விருது அறிவித்தவுடன் பாட்டியை ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததாக, நெகிழ்ச்சிபட தெரிவித்தனர்.