கோவை: கோவைக்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பத்மஸ்ரீ விருது பெற்ற 105 வயதுடைய பாப்பம்மாளுக்கு சால்வை அணிவித்து கெளரப்படுத்தினார்.
கோவை: கோவைக்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பத்மஸ்ரீ விருது பெற்ற 105 வயதுடைய பாப்பம்மாளுக்கு சால்வை அணிவித்து கெளரப்படுத்தினார்.
கோவையில் முன்னாள் அதிமுக எம்.பி கேசி.பழனிச்சாமி இல்ல திருமண வரவேற்பு விழாவிற்கு சென்னையிலிருந்து விமானம் மூலம், கோவை விமானநிலையம் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விமானநிலையத்தில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, தனியார் விடுதியில், பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பாமாளை (105) சந்தித்த திமுக தலைவர் அவருக்கு சால்வை அணிவித்து கெளரப்படுத்தினார்.

அவரின் மரியாதையை ஏற்றி கொண்ட பாட்டி, ஸ்டாலினை "நீ நல்லா இருக்கணும் சாமி", என்று மனதார வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில், மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சிஆர்.இராமசந்திரன், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா என்ற கிருஷ்ணன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.