திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம்முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூவரும், திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம்முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூவரும், திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் செயல்படும் என தமிழக அரசின் உத்தரவின் பேரில் அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் செயல்பட ஆரம்பித்தன. மாவட்ட சுகாதார துறை சார்பில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 22, 23, 24 ஆகிய தேதிகளில் பள்ளிக்கு வந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
12 வகுப்பு பயிலும் 2 மாணவர்கள் மற்றும் 1 மாணவி என 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் அவர்களிடம் கேட்ட போது, பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர், என்றார்.
மேலும் , பள்ளி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, அந்த 3 மாணவர்கள் பயன்படுத்திய வகுப்பறைகள் ஒரு வார காலத்திற்கு யாரும் பயன்படுத்தாத வகையில் மூடி வைக்கப்படும், என்றும் தெரிவித்தார்.
மேலும், அரசு கூறியுள்ள அறிவுரைப்படி ஏற்பாடுகள் செய்யப்படு மற்ற மாணவர்களுக்கு வேறு வகுப்பறைகளில் வகுப்பு எடுக்கப்படும் என்றும் , பள்ளி தொடர்ந்து செயல்படும் என்றும் கூறினார்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் செயல்படும் என தமிழக அரசின் உத்தரவின் பேரில் அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் செயல்பட ஆரம்பித்தன. மாவட்ட சுகாதார துறை சார்பில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 22, 23, 24 ஆகிய தேதிகளில் பள்ளிக்கு வந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
12 வகுப்பு பயிலும் 2 மாணவர்கள் மற்றும் 1 மாணவி என 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் அவர்களிடம் கேட்ட போது, பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர், என்றார்.
மேலும் , பள்ளி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, அந்த 3 மாணவர்கள் பயன்படுத்திய வகுப்பறைகள் ஒரு வார காலத்திற்கு யாரும் பயன்படுத்தாத வகையில் மூடி வைக்கப்படும், என்றும் தெரிவித்தார்.
மேலும், அரசு கூறியுள்ள அறிவுரைப்படி ஏற்பாடுகள் செய்யப்படு மற்ற மாணவர்களுக்கு வேறு வகுப்பறைகளில் வகுப்பு எடுக்கப்படும் என்றும் , பள்ளி தொடர்ந்து செயல்படும் என்றும் கூறினார்.