சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது!

கோவை: கோவையில் 17 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் திருமணத்துக்கு மறுத்ததால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் 17 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் திருமணத்துக்கு மறுத்ததால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையைச் சேர்ந்தவர் யாகூப் (வயது 22). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியுடன் நட்பு ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது.

தொடர்ந்து அந்தச் சிறுமியிடம் திருமண ஆசை கூறி அடிக்கடி உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் அந்தச் சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமானார். இதையடுத்து அந்தச் சிறுமிதன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் கருவை கலைத்து விடு என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய சிறுமி கர்ப்பத்தை கலைத்துவிட்டார். அதன்பிறகு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்ட சிறுமியை நீ யார் என்று எனக்குத் தெரியாது என்று கூறிய அந்த வாலிபர் திருமணம் செய்ய மறுத்துவிட்டாராம். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கோவை குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...