பிப்ரவரி 15-ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் 73 ஜோடிக்கு திருமணம்: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பார்கள் என தகவல்!

கோவை: ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி பிப்ரவரி 15-ந்தேதி 73 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்த விழாவில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பார்கள் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.



கோவை: ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி பிப்ரவரி 15-ந்தேதி 73 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்த விழாவில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பார்கள் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு 73 ஜோடி ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மணமக்களுக்கு 73 வகையான சீர்வரிசையுடன் பிப்ரவரி 15 தேதி திருமணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கால்கோள் நடும் விழா பேரூர் செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, `ஆண்டுதோறும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட அதிமுக சார்பில் ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பது வழக்கம்.

வருகின்ற பிப்ரவரி 15ம்- தேதி நடைபெறும் திருமண விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் ஜெயலலிதா ஆட்சியில் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் சென்றடைந்துள்ளது. இதனால் அனைத்து மக்களும் ஜெயலலிதாவை நினைவு கூர்கின்றனர்.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் முதல்வர் வேட்பாளரை அறிவித்தவுடனே முதல்வரின் வெற்றி உறுதியாகிவிட்டது. இதற்கு கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட மக்களே சாட்சி' என தெரிவித்தார்.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...