பிப்ரவரி 15-ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் 73 ஜோடிக்கு திருமணம்: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பார்கள் என தகவல்!

கோவை: ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி பிப்ரவரி 15-ந்தேதி 73 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்த விழாவில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பார்கள் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.



கோவை: ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி பிப்ரவரி 15-ந்தேதி 73 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்த விழாவில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பார்கள் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு 73 ஜோடி ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மணமக்களுக்கு 73 வகையான சீர்வரிசையுடன் பிப்ரவரி 15 தேதி திருமணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கால்கோள் நடும் விழா பேரூர் செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, `ஆண்டுதோறும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட அதிமுக சார்பில் ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பது வழக்கம்.

வருகின்ற பிப்ரவரி 15ம்- தேதி நடைபெறும் திருமண விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் ஜெயலலிதா ஆட்சியில் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் சென்றடைந்துள்ளது. இதனால் அனைத்து மக்களும் ஜெயலலிதாவை நினைவு கூர்கின்றனர்.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் முதல்வர் வேட்பாளரை அறிவித்தவுடனே முதல்வரின் வெற்றி உறுதியாகிவிட்டது. இதற்கு கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட மக்களே சாட்சி' என தெரிவித்தார்.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....