கோவையில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி; சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் தகவல்

கோவை: கோவையில் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:- கொரோனா தடுப்பூசி கடந்த 16-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகின்றன. கோவைக்கு இரண்டாம் கட்டமாக 42,400 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

கோவையில் முதல் கட்டமாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள 58 ஆயிரம் பேர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, சீதாலட்சுமி நகர் நல மையம், தாளியூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுவரை, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக 42 ஆயிரத்து 400 தடுப்பு ஊசி கோவைக்கு வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்களிடையே நிலவி வந்த அச்சம் தயக்கம் குறைந்துள்ளது.

இதுவரை தடுப்பூசி போட்டவர்களுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. தற்போது, இரண்டாம் கட்டமாக செலுத்த வேண்டிய தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு ரமேஷ் குமார் தெரிவித்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...