வால்பாறை: வால்பாறையில், காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி படுகாயமடைந்தார்.
வால்பாறை: வால்பாறையில், காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி படுகாயமடைந்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது அனலீ எஸ்டேட். இங்கு தொழிலாளியாக உள்ளவர் பெரியான். இவர் தேயிலைத் தோட்டத்தில் இருந்து அவரது வீட்டுக்கு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தேயிலைத் தோட்டத்தில் இருந்து காட்டு யானை ஒன்று சாலையில் வருவதைக் கவனிக்காமல் பெரியான் சென்றார்.
யானை இவரது அருகே வந்ததும் யானையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால், அந்த யானை தும்பிக்கையை நீட்டி அவரைத் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.
அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது அனலீ எஸ்டேட். இங்கு தொழிலாளியாக உள்ளவர் பெரியான். இவர் தேயிலைத் தோட்டத்தில் இருந்து அவரது வீட்டுக்கு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தேயிலைத் தோட்டத்தில் இருந்து காட்டு யானை ஒன்று சாலையில் வருவதைக் கவனிக்காமல் பெரியான் சென்றார்.
யானை இவரது அருகே வந்ததும் யானையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால், அந்த யானை தும்பிக்கையை நீட்டி அவரைத் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.
அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியது.