சொத்துவரி செலுத்தாததால் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு - மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

கோவை மாநகராட்சியில் சொத்துவரி உள்ளிட்டவற்றை கட்டாதவர்கள் மீது நடிவடிக்கை எடுக்க கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். 

அதனடிப்படையில், கோவை மாவட்ட கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 57-வது வார்டு, மசக்காளிபாளையம் சின்னசாமி வீதியில் வசித்து வரும் சுப்ரமணியம் என்பவர் சொத்துவரி 46 ஆயிரத்து 682 செலுத்தாமல் இருந்துவந்துள்ளார். அவரது வீட்டின் குடிநீர் இணைப்பும், தெற்கு பகுதிக்கு உட்பட்ட போத்தனூர் மணிகண்டன், திருமால்வேந்தன் சொத்து வரி 53 ஆயிரத்து 790 ரூபாய் செலுத்தாததாலும் அவர்களது குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

இதேப்போன்று கோவை வடக்கு பகுதிக்கு உட்பட்ட கணபதி பகுதியில் செயல்படும் யுனிவர்சல் மிஷினரி ஒர்க்ஸ் சொத்து வரி ரூ.8 ஆயிரத்து 386 மற்றும், ரூ.10 ஆயிரத்து 721 செலுத்தாமலும் இருந்து வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அதன் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் கோவை மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஜப்தி நடவடிக்கையினை தவிர்க்குமாறு அவர்தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...