கோவை மாநகராட்சியில் சொத்துவரி உள்ளிட்டவற்றை கட்டாதவர்கள் மீது நடிவடிக்கை எடுக்க கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில், கோவை மாவட்ட கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 57-வது வார்டு, மசக்காளிபாளையம் சின்னசாமி வீதியில் வசித்து வரும் சுப்ரமணியம் என்பவர் சொத்துவரி 46 ஆயிரத்து 682 செலுத்தாமல் இருந்துவந்துள்ளார். அவரது வீட்டின் குடிநீர் இணைப்பும், தெற்கு பகுதிக்கு உட்பட்ட போத்தனூர் மணிகண்டன், திருமால்வேந்தன் சொத்து வரி 53 ஆயிரத்து 790 ரூபாய் செலுத்தாததாலும் அவர்களது குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இதேப்போன்று கோவை வடக்கு பகுதிக்கு உட்பட்ட கணபதி பகுதியில் செயல்படும் யுனிவர்சல் மிஷினரி ஒர்க்ஸ் சொத்து வரி ரூ.8 ஆயிரத்து 386 மற்றும், ரூ.10 ஆயிரத்து 721 செலுத்தாமலும் இருந்து வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அதன் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் கோவை மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஜப்தி நடவடிக்கையினை தவிர்க்குமாறு அவர்தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், கோவை மாவட்ட கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 57-வது வார்டு, மசக்காளிபாளையம் சின்னசாமி வீதியில் வசித்து வரும் சுப்ரமணியம் என்பவர் சொத்துவரி 46 ஆயிரத்து 682 செலுத்தாமல் இருந்துவந்துள்ளார். அவரது வீட்டின் குடிநீர் இணைப்பும், தெற்கு பகுதிக்கு உட்பட்ட போத்தனூர் மணிகண்டன், திருமால்வேந்தன் சொத்து வரி 53 ஆயிரத்து 790 ரூபாய் செலுத்தாததாலும் அவர்களது குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இதேப்போன்று கோவை வடக்கு பகுதிக்கு உட்பட்ட கணபதி பகுதியில் செயல்படும் யுனிவர்சல் மிஷினரி ஒர்க்ஸ் சொத்து வரி ரூ.8 ஆயிரத்து 386 மற்றும், ரூ.10 ஆயிரத்து 721 செலுத்தாமலும் இருந்து வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அதன் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் கோவை மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஜப்தி நடவடிக்கையினை தவிர்க்குமாறு அவர்தெரிவித்துள்ளார்.