திருப்பூர்: திருப்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் பிஏபி பாசன விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சுமூக தீர்வு ஏற்படுத்துவதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் பிஏபி பாசன விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சுமூக தீர்வு ஏற்படுத்துவதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு வழங்க வேண்டிய சட்டப்படியான பாசனத் தண்ணீரை வழங்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை 5வது நாளாக இன்று புதிதாக 3 பேர் இணைந்து 26 விவசாயிகள் பங்கேற்று உண்ணா நிலையை கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுவரை நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. ஒன்பது சுற்றுகள் வழங்க வேண்டிய தண்ணீரை ஐந்து சுற்றுகள் மட்டுமே வழங்குவதாகவும் அதிகாரிகளே தண்ணீர் விற்பனையில் ஈடுபடுவதாகவும் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் புகார் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அலுவலகங்களில் புகார் மனுக்கள் கொடுத்து வந்தனர்.
ஆனால், இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், பாசன தண்ணீரை பயன்படுத்தும் விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். 5வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்று கோவை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த உண்ணாவிரத குழுவினர் தங்களுடைய கோரிக்கையை தெரிவித்தனர். முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுமூக தீர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். சுமூக தீர்வு வழங்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு வழங்க வேண்டிய சட்டப்படியான பாசனத் தண்ணீரை வழங்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை 5வது நாளாக இன்று புதிதாக 3 பேர் இணைந்து 26 விவசாயிகள் பங்கேற்று உண்ணா நிலையை கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுவரை நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. ஒன்பது சுற்றுகள் வழங்க வேண்டிய தண்ணீரை ஐந்து சுற்றுகள் மட்டுமே வழங்குவதாகவும் அதிகாரிகளே தண்ணீர் விற்பனையில் ஈடுபடுவதாகவும் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் புகார் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அலுவலகங்களில் புகார் மனுக்கள் கொடுத்து வந்தனர்.
ஆனால், இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், பாசன தண்ணீரை பயன்படுத்தும் விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். 5வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்று கோவை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த உண்ணாவிரத குழுவினர் தங்களுடைய கோரிக்கையை தெரிவித்தனர். முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுமூக தீர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். சுமூக தீர்வு வழங்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.