மசினகுடி யானைக்கு தீ வைத்த சம்பவத்தில் விடுதிக்கு சீல்!

நீலகிரி: மசினகுடி யானைக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக அந்தப்பகுதியில் உள்ள விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.


நீலகிரி: மசினகுடி யானைக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக அந்தப்பகுதியில் உள்ள விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே மசினகுடி வனப்பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று காயங்களுடன் சுற்றித்திரிவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து யானையை மீட்ட வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்தது முகாமுக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே யானை பரிதாபமாக உயிரிழந்தது.

இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணைக்கு நடுவே யானைக்கு காயம் ஏற்பட்டது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அதாவது மசினகுடி பகுதிக்கு வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் யானையை விரட்டுவதற்காக விடுதியைச் சேர்ந்த சிலர் யானை மீது தீ வைத்தது தெரியவந்தது. தீ வைக்கப்பட்டதால் தலை மற்றும் காது பகுதிகளில் தீப்பிடித்த அந்த யானை அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தது.



இந்த வீடியோ வெளியானதையடுத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக மாவல்லா பகுதியைச் சேர்ந்த ரேமண்ட், பிரசாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரையன் என்பவரை தேடி வருகின்றனர். யானைக்கு தீ வைத்தது மட்டுமல்லாமல் விதிகளை மீறி அந்த இடத்தில் விருந்தினர் விடுதி கட்டியது தொடர்பாக விடுதியை நடத்தி வந்த சகோதரர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் விடுதி அறைகளுக்குகூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்தனன் மற்றும் மசினகுடி ஊராட்சி செயலாளர் கிரண் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...