கோவை: சேலம் பள்ளி மாணவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து கோவை பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
கோவை: சேலம் பள்ளி மாணவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து கோவை பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
கோவையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த 19-ஆம் தேதி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. தொற்று ஏற்படாமலிருக்க மாணவர்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் கோவை மாவட்ட பள்ளிக்கல்வி சார்பில் சுகாதாரத்துறையினர் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்கள் ஒவ்வொரு பள்ளியாகச் சென்று நோய்த்தொற்று பரவாமலிருக்க எவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்குகின்றனர். கபசுரக் குடிநீர் மற்றும் வைட்டமின் மாத்திரைகளும் வழங்குகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறுகையில்:- பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்கவேண்டும். காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு ஆரம்ப சுகாதாரநிலைய ஊழியர்களைக் கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை யாருக்கும் கோவையில் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த 19-ஆம் தேதி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. தொற்று ஏற்படாமலிருக்க மாணவர்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் கோவை மாவட்ட பள்ளிக்கல்வி சார்பில் சுகாதாரத்துறையினர் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்கள் ஒவ்வொரு பள்ளியாகச் சென்று நோய்த்தொற்று பரவாமலிருக்க எவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்குகின்றனர். கபசுரக் குடிநீர் மற்றும் வைட்டமின் மாத்திரைகளும் வழங்குகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறுகையில்:- பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்கவேண்டும். காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு ஆரம்ப சுகாதாரநிலைய ஊழியர்களைக் கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை யாருக்கும் கோவையில் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.