கோவை: கோவையில் காரை வழிமறித்து ஹவாலா கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த 4 பேர் கும்பலுக்கு ஹவாலா கொள்ளையில் தொடர்பு இருப்பதாக கோவை மாவட்ட எஸ்.பி. அருளரசு தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் காரை வழிமறித்து ஹவாலா கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த 4 பேர் கும்பலுக்கு ஹவாலா கொள்ளையில் தொடர்பு இருப்பதாக கோவை மாவட்ட எஸ்.பி. அருளரசு தெரிவித்துள்ளார்.
கோவை மதுக்கரை மரப்பாலம் அருகே கடந்த 17-ஆம் தேதி டிரைவரைத் தாக்கிவிட்டு அவரிடமிருந்து 10 லட்சம் ரூபாயை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக கால்டாக்சி டிரைவர் பாலக்காடு மாவட்டம் மன்னார்காப்டைரைச் சேர்ந்த முகமது முஸ்தபா மதுக்கரை போலீசிடம் புகார் தெரிவித்தார். இந்தக் கொள்ளையில் கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து எஸ்.பி.அருளரசு கூறியதாவது:- கேரள மாநிலம் ஆலப்புழா கண்ணூர் மலப்புரம் பகுதிகளில் இருந்து செயல்படும் 4 பேர் கும்பல் வாகனங்களை வழிமறித்து ஹவாலா பணத்தைக் கொள்ளையடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆலப்புழாவில் உள்ள கும்பல்தான் மதுக்கரை மரப்பாலம் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. கோவை திருச்சி இடையே உள்ள 200 கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் இது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி கோவை நவக்கரையில் காரில் கடத்தி வரப்பட்ட ஹவாலா பணம் 27.5 லட்சம் ரூபாயை கேரள கும்பல் கொள்ளையடித்தது. இதையடுத்து ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 90 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து விசாரிக்க வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்காக சிறப்பு அலுவலரை நியமித்து அதுகுறித்த ஆவணங்களை அமலாக்கத்துறை சிறப்பு அதிகாரியிடம் விரைவில் வழங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மதுக்கரை மரப்பாலம் அருகே கடந்த 17-ஆம் தேதி டிரைவரைத் தாக்கிவிட்டு அவரிடமிருந்து 10 லட்சம் ரூபாயை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக கால்டாக்சி டிரைவர் பாலக்காடு மாவட்டம் மன்னார்காப்டைரைச் சேர்ந்த முகமது முஸ்தபா மதுக்கரை போலீசிடம் புகார் தெரிவித்தார். இந்தக் கொள்ளையில் கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து எஸ்.பி.அருளரசு கூறியதாவது:- கேரள மாநிலம் ஆலப்புழா கண்ணூர் மலப்புரம் பகுதிகளில் இருந்து செயல்படும் 4 பேர் கும்பல் வாகனங்களை வழிமறித்து ஹவாலா பணத்தைக் கொள்ளையடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆலப்புழாவில் உள்ள கும்பல்தான் மதுக்கரை மரப்பாலம் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. கோவை திருச்சி இடையே உள்ள 200 கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் இது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி கோவை நவக்கரையில் காரில் கடத்தி வரப்பட்ட ஹவாலா பணம் 27.5 லட்சம் ரூபாயை கேரள கும்பல் கொள்ளையடித்தது. இதையடுத்து ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 90 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து விசாரிக்க வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்காக சிறப்பு அலுவலரை நியமித்து அதுகுறித்த ஆவணங்களை அமலாக்கத்துறை சிறப்பு அதிகாரியிடம் விரைவில் வழங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.