கோவை: இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய வழக்கு தொடர்பாக கோவை போலீஸ் கமிஷனர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
கோவை: இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய வழக்கு தொடர்பாக கோவை போலீஸ் கமிஷனர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவில் 2013 -ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக இருந்தவர் சேகர். இவர் விழுப்புரத்தை அடுத்த விண்ணான்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் காரில் மதுபாட்டில் கடத்தியதால் அவரது காரை விடுவிக்க 20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் ஏட்டு சுந்தரமூர்த்தி ஆகியோரை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சஸ்பெண்டு செய்தனர்.
இவர்கள் மீது குற்றவழக்கு தொடர அப்போதைய விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த சுமித் சரண் உத்தரவிட்டார். அதன்படி இருவர் மீதும் விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியம் அளிக்க அப்போதைய டி.ஐ.ஜி.யாக இருந்து தற்போது கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வரும் சுமித் சரணை விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்று விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சுமித் சரண் ஆஜராகி சாட்சியம் அளித்தார். வழக்கு விசாரணையை நீதிபதி மோகன் வரும் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவில் 2013 -ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக இருந்தவர் சேகர். இவர் விழுப்புரத்தை அடுத்த விண்ணான்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் காரில் மதுபாட்டில் கடத்தியதால் அவரது காரை விடுவிக்க 20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் ஏட்டு சுந்தரமூர்த்தி ஆகியோரை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சஸ்பெண்டு செய்தனர்.
இவர்கள் மீது குற்றவழக்கு தொடர அப்போதைய விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த சுமித் சரண் உத்தரவிட்டார். அதன்படி இருவர் மீதும் விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியம் அளிக்க அப்போதைய டி.ஐ.ஜி.யாக இருந்து தற்போது கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வரும் சுமித் சரணை விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்று விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சுமித் சரண் ஆஜராகி சாட்சியம் அளித்தார். வழக்கு விசாரணையை நீதிபதி மோகன் வரும் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.