பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி சேதுபதி நகரைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து முகநூலில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பதிவு செய்திருந்தார் எனவும், இதை பார்த்த அதிமுகவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் நவநீத கிருஷ்ணனிடம் இது குறித்து கேட்டபோது, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, செல்வராஜ் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், நவநீதகிருஷ்ணன் மீது அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரை, போலீசார் ஜே.எம்- 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, நவநீதகிருஷ்ணனை சொந்த ஜாமீனில் விடுவித்தார்.

முன்னதாக, மருத்துவ பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு நவநீதகிருஷ்ணனை போலீசார் அழைத்துச் சென்ற போது, அங்கு திரண்ட திமுகவினர், ஆளுங்கட்சியினர் திமுகவினர் மீது பொய் வழக்குப் போடுவதாக கூறி தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி சேதுபதி நகரைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து முகநூலில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பதிவு செய்திருந்தார் எனவும், இதை பார்த்த அதிமுகவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் நவநீத கிருஷ்ணனிடம் இது குறித்து கேட்டபோது, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, செல்வராஜ் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், நவநீதகிருஷ்ணன் மீது அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரை, போலீசார் ஜே.எம்- 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, நவநீதகிருஷ்ணனை சொந்த ஜாமீனில் விடுவித்தார்.
முன்னதாக, மருத்துவ பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு நவநீதகிருஷ்ணனை போலீசார் அழைத்துச் சென்ற போது, அங்கு திரண்ட திமுகவினர், ஆளுங்கட்சியினர் திமுகவினர் மீது பொய் வழக்குப் போடுவதாக கூறி தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.