பொள்ளாச்சியில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கைது; அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து அவதூறு பரப்பியதாக வழக்கு..!

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.


பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி சேதுபதி நகரைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து முகநூலில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பதிவு செய்திருந்தார் எனவும், இதை பார்த்த அதிமுகவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் நவநீத கிருஷ்ணனிடம் இது குறித்து கேட்டபோது, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, செல்வராஜ் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், நவநீதகிருஷ்ணன் மீது அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரை, போலீசார் ஜே.எம்- 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, நவநீதகிருஷ்ணனை சொந்த ஜாமீனில் விடுவித்தார்.



முன்னதாக, மருத்துவ பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு நவநீதகிருஷ்ணனை போலீசார் அழைத்துச் சென்ற போது, அங்கு திரண்ட திமுகவினர், ஆளுங்கட்சியினர் திமுகவினர் மீது பொய் வழக்குப் போடுவதாக கூறி தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...