பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அருளானந்தம் உட்பட மூன்று குற்றவாளிகளுக்கு வருகின்ற 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அருளானந்தம் உட்பட மூன்று குற்றவாளிகளுக்கு வருகின்ற 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு.


பொள்ளாச்சி:பொள்ளாச்சி பாலியல் வழக்கில், சிபிஐ யால்கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் உள்ள அதிமுகவை சேர்ந்த அருளானந்தம் உட்பட மூவரின் நீதிமன்ற காவலை வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை நீட்டித்து, கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விசாரணை செய்து வந்த சி.பி.ஐபல்வேறு விதமான ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து பொள்ளாச்சி அதிமுக பிரமுகர் 

அருளானந்தம் (34), ஆச்சிபட்டியைச் சேர்ந்த ஹேரேன் பால் (29), வடுகபாளையத்தைச் சேர்ந்த பாபு என்கிற பைக் பாபு (27), ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைக்கப்பட்டனர். 

அதன் பிறகு, அருளானந்ததை மட்டும் சி.பி.ஐ காவலில் எடுத்து விசாரணை செய்து விட்டு, மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இன்றுடன் மூவரின்நீதிமன்ற காவல் முடிவதால், பலத்த பாதுகாப்போடு மகிலா நீதிமன்ற நீதிபதி முன்பாக இன்று அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். 

பின்னர், மூவருக்கும் வருகிற 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, சிபிஐ சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அவர்களுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, பரிசோதனைக்கு அனுமதி அளித்தார். அதனைத் தொடர்ந்து, அவர்கள் மூவரும் பலத்த பாதுகாப்போடு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...