கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 5,593 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 5,593 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு..!


கோவை: கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் "ஜல் ஜீவன்" திட்டத்தின் கீழ் கோவையில் ரூ 17.04 கோடி மதிப்பில் 5,593 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவையில்60 ஊராட்சிகளில் "ஜல் ஜீவன்" திட்டம்

நாட்டில் உள்ள கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024 ஆம் ஆண்டுக்குள் குடிநீர் இணைப்பு வழங்குவதை நோக்கமாக கொண்டு, மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக நடப்பு நிதியாண்டில் 60 ஊராட்சிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. 

இத்திட்டத்தின் மூலம், வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு, ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல், மேல்நிலை மற்றும் தரைமட்ட தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்படுகிறது. இதற்காக, ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ரூ 17.04 கோடி மதிப்பில் 5593 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு

கோவையில் இதுவரையில் 17.04 கோடி மதிப்பில் 5593 வீடுகளுக்கு, இத்திட்டம் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது, என மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில்: மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் 60 ஊராட்சிகளில் 311 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள 50 ஆயிரத்து 953 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதுவரையில் 5 ஆயிரத்து 593 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 158 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், 119 ஆழ்குழாய் கிணறுகள், 56 தரைமட்ட நீர்தேக்க தொட்டிகள், 178 பிரதான குடிநீர் குழாய் அமைத்தல் உள்பட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் திட்டமிடப்பட்ட 1,072 பணிகளில், 70 பணிகள் முழுமையாகவும், 623 பணிகள் பகுதியளவும் முடிவடைந்துள்ளன. நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் அனைத்து திட்ட பணிகளையும் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...