கோவை: கோவை உக்கடம் லாரி பேட்டையில், ரு 1 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை: கோவை உக்கடம் லாரி பேட்டையில், ரு 1 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்துக்கு கர்நாடக மற்றும் பிற மாநிலங்களிலிருந்து அதிகளவிலான தடை செய்யப்பட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு, கல்லூரி மாணவர்கள் மற்றும் வட இந்தியர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில், கோவை உக்கடம் லாரி பேட்டையில் போதைப்பொருட்கள் கர்நாடகவில் இருந்து சரக்கு வாகனங்களில், கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மாநகர துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையிலான காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில், சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான 24 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, அப்பாஸ்(38) மற்றும் ஜெய்னுல்லா அபுதீன்(56) ஆகிய இருவரை கைது செய்த உக்கடம் போலீசார், இருவர் மீதும் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (விளம்பரம் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, விநியோகம், விற்பனை தடை) சட்டம் COTPA-வின் கீழ் 7(1)r/w 20(1) வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.