கோவை: கோவையில் லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் உள்ள காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல் வளாகத்தில் இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை காருண்யா பள்ளி வளாகம் உட்பட பால் தினகரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் உள்ள காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல் வளாகத்தில் இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு கார்களில் வந்த எட்டு அதிகாரிகள் தற்போது இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மற்றும் கோவை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில், கிறிஸ்தல மதபோதகரான பால் தினகரனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
பால்தினகரனின் "இயேசு அழைக்கிறார்" உட்பட அவரது அனைத்து நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
மொத்தம் 28 இடங்களில் நடைபெறும் இந்த சோதனையில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். வளாகத்தின் வாயில் கதவுகள் அடைக்கப்பட்டு சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.