கோவை: வாடகை செலுத்தாத பழக்கடை, டீக்கடை உள்பட 13 கடைகளுக்கு கோவை மாநகராட்சி பூட்டு போட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
கோவை: வாடகை செலுத்தாத பழக்கடை, டீக்கடை உள்பட 13 கடைகளுக்கு கோவை மாநகராட்சி பூட்டு போட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகங்கள் உள்ளன. இதில் உள்ள பல கடைகளின் உரிமையாளர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதையடுத்து வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் கோவை மேற்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில் அரசன் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் மருதமலை, டி.பி.ரோடு, கிருஷ்ணசாமி ரோடு, ஆரோக்கியசாமி ரோடு உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி வணிக வளாகத்துக்கு வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்த உணவகங்கள், பழக்கடை, டீக்கடை உள்பட 13 கடைகளுக்கு பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகங்கள் உள்ளன. இதில் உள்ள பல கடைகளின் உரிமையாளர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதையடுத்து வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் கோவை மேற்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில் அரசன் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் மருதமலை, டி.பி.ரோடு, கிருஷ்ணசாமி ரோடு, ஆரோக்கியசாமி ரோடு உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி வணிக வளாகத்துக்கு வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்த உணவகங்கள், பழக்கடை, டீக்கடை உள்பட 13 கடைகளுக்கு பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.